2015-16ல் ஆசியாவின் முண்ணனி நிறுவனம், தனது கிளை நிறுவனத்தின் முலம் 100+ மேற்பட்ட கல்லூரி மாணவர்களிடம் 100000 பணம் பெற்று 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் முதல் நிறுவனத்தில் 8000 சம்பளம் கொடுத்து 12வது மாதம் வேலையை வாங்கிவிட்டு, இரண்டே நாட்களில் பணியை விட்டு தூக்கியெறிந்து மோசடி செய்தது. முன்பெல்லாம் இதுபோன்ற மோசடிகள் அரசு வேலைவாய்ப்பில் நிகழும் தற்போது தனியார் பெரு மற்றும் சிறு நிறுவனங்களில் அதிகமாக இருக்கிறது. இந்த மோசடிகளை நிறுவனங்களே முன்நின்று செய்வதுதான் வேதனை, இதைகூட டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி என்று மார்தட்டி கொள்ள ஒரு கூட்டம் இருக்கதான் செய்கிறது.நிறுவனங்கள் தரும் அதிகபட்ச வேலை அழுத்ததினாலும், பணி நீக்கத்தாலும் சமுகத்தில் தற்கொலையும், குற்ற சம்பவங்களும் ஏற்பட துவங்கிவிட்டன, உதாரணமாய் சில சம்பவங்கள்
1. ஊழியர் தற்கொலை நிகழ்வுகள்-1
2. ஊழியர் தற்கொலை நிகழ்வுகள்-2
இந்த குற்றங்கள் அனைத்திற்க்கும், தனிப்பட்டவர்களின் மனநிலையும், செயல்களே காரணம் எனக்கூட நினைக்கலாம் ஆனால் இதற்கு பிண்ணனியில் நிறுவனங்களின் தவறான முடிவுகளும், தோற்றுபோன குறைதீர்க்கும் சிஸ்டம் (Grievance system) போன்றவைகளும் ஒருவகையில் காரணங்களாய் இருக்கிறது.
முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு

அரசின் நீண்டகால ஒப்பந்த தொழிலாளர் சட்டத்ததின் முலமும், தொழிலாளர் துறையின் அலட்சியத்தாலும், நிறுவனங்களின் நயவஞ்சக சுழ்ச்சியாலும் தொழிலாளர்கள் வஞ்சிக்கபடுகின்றனர்.
1. டெலிவரியின் முக்கியத்துவம் கருதி, அதிகபட்ச வேலையும் , விடுமுறை நாட்களில் வேலையும் கட்டாயமாக வீட்டிலிருந்தோ, அலுவலகம் வந்தோ செய்ய வேண்டும்
2. ஆன்சைட் வாய்ப்பு அனைவருக்கும் உத்திரவாதமல்ல, நாங்கள் தருவதுதான் , தரும்போது ஏற்றுகொள்ள வேண்டும்
3. பதவிஉயர்வு, சம்பள உயர்வு நாங்கள் தருவதுதான், விரலுக்கேற்ற வீக்கம் போல் வாழ கற்றுகொள்ளுங்கள்
4. நிறுவனத்தின் வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்க்கு பணி நீக்கம் இன்றியமையாதது, தியாக மனப்பான்மையுடன் ஏற்றுகொள்ளுங்கள்
5.சமுக வலைதளங்களில் நிறுவனங்களை விமர்சிப்பது அதை செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும்
6. வேலையின் சுமையை கையாள தெரியாதவர்கள், பணி நீக்கம் செய்யபட்டவர்களின் தற்கொலை, குற்றம் செயங்களில் ஈடுபட்டால் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல, அது அவர்களின் விதி
7. நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்க, செலவினங்களை குறைக்க, இதுவரை வழங்கபட்ட வாகன வசதி, தொழில்நுட்ப தேர்ச்சி தேர்வுகளுக்கான உதவிக்தொகை அனைத்தும் படிபடியாக நிறுத்தபடும்,, மறுகேள்வி கேட்டகூடாது
8. பெஞ்சில் காத்திருப்போர்க்கு, சம்பளம் பாதியாகத்தான் வழங்கபடும், மீதி Variable pay என்று பிடித்து கொள்ளபடும்
9. பேரிடர் காலங்களிலும், வெளியூர் சென்றாவது பணியை தொடர்வது ஊழியர்களின் பொறுப்பு, தவறும் பட்சத்தில் வருடாத்திர பணி மதிப்பீட்டில் கவனத்தில் கொண்டு திறன் மதிப்பிடு செய்யபடும்
10. வருடாந்திர திறன் மதிப்பிடு எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்வியை கேட்டகூடாது.இதற்க்கு உடன்பட்டவர்கள், நிறுவனத்தில் இருந்தால் போதும், உடன்படாதவர்கள் பதவி விலகி கொள்ளுங்கள், நாங்கள் தடுக்கபோவதில்லை ..இதை எதிர்த்து கேட்பவர்களை, எங்களை மாறவும், விதிகளை பின்பற்ற சொல்லவும் நீங்கள் யார் ? நாங்கள் தோப்பு, நீங்கள் தனி மரம் என்றே பணியாளர்களை பயமுறுத்துகிறது.
இத்தகைய ஆணவப்போக்கை, சமுக பொறுப்போடு, நடுநிலையாக கண்டிக்கவேண்டிய இதை ஆதரித்தே எழுதுகின்றன, உதாரணமாய் சமீப காலங்களில் தேசிய பத்திரிக்கைகளில் வந்த சில செய்திகள் கிழே பட்டியலிட்டுள்ளேன் இதன்முலம் இவர்கள் போதிப்பது, நிறுவனங்களை அனுசரித்து, எந்தவித எதிர்ப்பு செய்யாமல் நீங்களாகவே வேறு பணியை தேடி கொள்ளுங்கள் ஆனால் எழுத மறந்தது பணிநீக்கத்தில் நிறுவனம் கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறையும் அதை பெறுவதற்கான வழிமுறையையும் எந்த ஊடகமும் எழுதுவதில்லை.
1.வேலையை இழக்க போவதற்கான அறிகுறிகள்
2. 57% பணியாளர்கள் வேலையிலிருந்து மாற விரும்புகிறார்கள்
ஐடி துறையில் உள்ள வேலை நீக்கத்தின் மீதான அரசியல் கட்சிகளின் பார்வையும், சமுக தள விவாதங்களும் :
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு ஐடி விங்கை வைத்திருத்கிறார்கள் அதை கொண்டு தேர்தல் பிரசாரத்திற்க்காகவும், வெறுப்பு அரசியலுக்காகவும் பயன்படுத்துகிறார்களே தவிர ஆக்கபூர்வமாக பயன்படுத்தபடுகிறதா என்பது சந்தேகமே, ஏனேனில் இன்று வரை எந்தவித ஊழியர் பிரச்சினையும் பேசபடவில்லை என்பது வருத்தமே. இது போன்று நிறுவனங்களில் பெயரில் தொடங்கபட்டுள்ள Confessions முகநூல் பக்கங்களும், இங்கு பதிவிடப்படும் அனைத்து நிறுவனங்கள் சார்ந்த , பணி நீக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பற்றி பேசாமல் அதை மடைமாற்றும் பணியை சிறப்பாக செய்கின்றன, அந்த முகநூல் பக்கங்களில் சொல்லபடும் முடிவானது நிறுவனத்தின் தவறுகளை எதிர்க்காமல் அனுசரித்து செல் என்பதே, இதுவா தீர்வு? தவறை திருத்திகொள்ள என்ன செய்யவேண்டும் என்று விவாதிப்பதே தீர்வாக இருக்கமுடியுமே தவிர விலகி செல்வது, நிறுவனங்கள் மீண்டும் பல தவறுகளை செய்வதற்க்கு ஊக்கபடுத்துவதாய் அமையும். இந்த பக்கங்கள் அனைத்தும் நிறுவனங்களின் “B” டீம்மாகவே செயல்படுகிறது.
எது வேலைவாய்ப்பு?
கடந்த 5 ஆண்டுகளில், ஆயிரத்திற்க்கு மேற்பட்ட படித்த பட்டதாரிகள் தகுந்த வேலையின்றி, Swiggy, Zomato, மற்றும் Uber Eats நிறுவனங்களில் உணவு விநியோகிக்கும் பணிக்கு ஒப்பந்ந அடிப்படையிலும், விவசாய மற்றும் சிறுதொழில் நிறுவன முதலாளிகள் Ola மற்றும் Uber கார் கார் டிரைவராகவும் அதிக பட்சத்தில் பெற்றுள்ளனர் ஆனால் இவை வளர்ச்சிக்கான வேலைவாய்ப்பா ? என யோசிக்கவேண்டும்
அனுபவமிக்க தொழிலாளர்களின் வாழ்க்கையானது, முழு நிலவிலிருந்து தேய்ந்து கொண்டிருக்கிறது, புதிதாய் வரும் தொழிலாளர்களோ எல்இடி (LED) வெளிச்சத்தை நிலவோளியாக நம்பவைக்கபட்டு ஏமாற்றபடுகிறார்கள்.
இந்த சுழ்ச்சியை நாம் எதிர்க்காவிட்டால், அடுத்த தலைமுறைக்கு நிரந்தர பணி மற்றும் ஊதியமின்றி, அடிமை வாழ்வை மேற்கொள்ள நேரிடும். எனவே ஊழியர்களாகிய நாம், ஒற்றுமையாய ஒருங்கிணைந்து இந்த நயவஞ்சக நாடத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்ட போராட்டம் செய்ய வேண்டியது நமது கடமை
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு