பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் சாலை விபத்தில் மரணம்

Saravanan R

சரவணன் ஆர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவரான திரு ஆர். சரவணன் சென்ற வாரம் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இது தொடர்பாக The Hindu ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி யின் தமிழாக்கம்:

“வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த 30 வயது ஐ.டி ஊழியர் ஒருவர் சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களால் புதன் கிழமை (ஏப்ரல் 5, 2017) அன்று உயிரிழந்தார். கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் திரு ஆர். சரவணன் கேம்ப் ரோட்டில் அவரது இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார். ஒரு பேருந்தை முந்திச் செல்ல முயற்சிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த அவர் ஒரு லாரியின் மீது மோதி லாரி சக்கரங்களுக்குக் கீழ் விழுந்திருக்கிறார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், புதன் கிழமை அதிகாலையில் விபத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.”

சரவணனை இழந்து துயருற்றிருக்கும் அவரது குடும்பம், நண்பர்கள் உறவினர்களுக்கு நமது மனமார்ந்த இரங்கல்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-member-passes-away-in-road-accident-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உலகத் தொழிலாளர் போராட்டங்கள் – 2019 – செப்டம்பர் 15 முதல் 21 வரை

தென் ஆப்பிரிக்காவின் மருந்து உற்பத்தி நிறுவனமான டிரான்ஸ்பார்மை தேசிய உடைமையாக்கக் கோரி அந்நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பிரான்சில் அரசு எரிசக்தி துறை நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்படுவதைக் ...

யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர் கைது – ஐ.டி ஊழியர்கள் கண்டனம்

நடக்கும் நிகழ்வுகள் இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கானதா அல்லது மக்களுக்கானதா என்ற பலத்த ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

Close