பத்திரிகை செய்தி : விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில்
ஏப்ரல் 18 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை

டந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக டெல்லியில் தமது கோரிக்கைகளுக்காக போராடி வரும் தமிழக விவசாயிகளை ஆதரித்து மெப்ஸ் (MEPZ) வளாகத்தில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

மெப்ஸ் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரி பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு அனுமதி மறுத்த காவல் துறை பல்லாவரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில் ஏப்ரல் 18, 2017 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மெப்ஸ், டைடல் பார்க், டி.எல்.எஃப் வளாகங்கள் மற்றும் பிற பகுதிகளில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் கலந்து கொண்டு போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்க உள்ளார்கள். இது தொடர்பாக இணைய தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்-அப் குழுக்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.டி ஊழியர்கள் ஆதரிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள்

  • மத்திய அரசு தமிழக விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு கந்து வட்டி, நுண்கடன் கும்பல்களிடமிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
  • அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 25,000 வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
  • மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வேண்டும். மாநில அரசு விவசாய பாசனத்துக்கான நீர்நிலைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை இழுத்து மூட வேண்டும்.
  • மத்திய மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசு நெடுவாசல் திட்டம் உட்பட விளைநிலங்களை பாதிக்கும் அனைத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
  • மாநில அரசு நெடுவாசல் திட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் – combatlayoff@gmail.com
இணைய தளம் – new-democrats.com

விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி தொடர்பாக new-democrats.com தளத்தில் முன்பு வெளியான பதிவுகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-ta-it-employees-demo-in-support-of-tn-farmers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: நாம் தயாரா?

தொழில் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள், பல பணிகளிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும். ஒரே படித்தான சில வேலைகள் அவசியமற்றதாகி காணாமல் போகும். மாற்றங்களைக் கோரிய போதும், திறன்...

செவிலியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராடுபவர்களுக்கு பதில் சொல்ல வக்கற்ற "எடப்பாடி" அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது! நம் உயிரைக் காக்க இரவு பகலாக உழைக்கும் செவிலியர்களின் உரிமைகளை மீட்க அனைவரும் வீதியில்...

Close