விவசாயிகளை காக்க சிறுசேரி SIPCOT-ல் ஐடி ஊழியர்கள் போராட்டம்.

மார்ச் 28, 2017 அன்று மாலை சிறுசேரி சிப்காட் எதிரில் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது.

  • மாலை 5:30 க்கு ஒரு மணி நேர காவல்துறையின் வாய்வழி அனுமதியுடன், முதலில் 10 பேர்களுடன் துவங்கிய போராட்டம் பின்பு கிட்டத்தட்ட 50 பேர்களுக்கு மேலாக இணைந்து கொண்டனர்.
  • SAVE NEDUVASAL, SAVE FARMERS, விவசாயத்தை காப்போம் என்பன போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் அமைதியான முறையில் SIPCOT நுழைவு வாயில் அருகே நடைபெற்றது.
  • போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ‘Whatsapp மற்றும் Facebook Group மூலம் நண்பர்களுக்குள் போராட்டம் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு/பரப்பப்பட்டு ஒன்றினைந்தோம்’ என்றார்கள்.
  • முழக்கங்கள் இல்லாமல் வெறும் பதாகைகள் ஏந்தி அமைதியாக நிற்கும் போராட்டமாக அமைந்தது.
  • மாலை 6:30 மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி, படங்கள் : சுரேஷ்

Permanent link to this article: http://new-democrats.com/ta/siruseri-sipcot-it-employees-in-solidarity-with-protesting-farmers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
லே ஆஃப், சரியா தவறா? – ஒரு கேள்வி, பல பதில்கள்

ஒரு கேள்வி, பல பதில்கள் - ஐ.டி நிறுவனங்களில் ஏன் ஆட்குறைப்பு நடக்கிறது? அதை பல்வேறு தரப்பினர் எவ்வாறு பார்க்கின்றனர்?

வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!

கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது மோடி அரசு! கார்ப்பரேட் முதலாளி கொள்ளைக்காக வங்கிக்குள் போகுது நமது பணம்! நாம் சம்பாதித்த, நாம் சேமித்த பணத்தை எடுக்க...

Close