ஐடி நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.. ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆட்குறைப்புக்குச் சொல்லும் காரணம் என்ன? ஐ.டி. ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற இந்நிறுவனங்கள் சொல்லும் காரணங்கள் உண்மையானவையா? நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எப்படி எதிர்கொள்ள வேண்டும்? விளக்குகிறார் ஐ.டி. நிறுவன ஊழியர் வாசுகி. தனது வேலை பறிக்கபட்ட சமயத்தில் NDLF IT தொழிற்சங்கத்தை நாடி, சட்டரீதியாக போராடி மீண்டும் பணியிலமர்ந்தார். பணியிழப்பு ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது? பாருங்கள்! பகிருங்கள்!